Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குளங்களில் களப்பணி 'கவுசிகா' அழைப்பு

குளங்களில் களப்பணி 'கவுசிகா' அழைப்பு

குளங்களில் களப்பணி 'கவுசிகா' அழைப்பு

குளங்களில் களப்பணி 'கவுசிகா' அழைப்பு

ADDED : ஜூலை 06, 2024 01:51 AM


Google News
கோவில்பாளையம்:குளங்களில் நாளை (7ம் தேதி) களப்பணி செய்ய, கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கவுசிகா நீர் கரங்கள் அமைப்பும், தன்னார்வலர்களும் இணைந்து, கோவை மாவட்டத்தில், 18 குளங்களில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சர்க்கார் சாமக்குளத்தில், 125 ஏக்கர் பரப்பளவு உள்ள காலிங்கராயன் குளத்தில், 233வது வாரமாக நாளை காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை, களப்பணி நடக்கிறது. இதே போல், 160 ஏக்கர் பரப்பளவு உள்ள அக்ரஹார சாமக்குளத்திலும், 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட எல்லப்பாளையம் ஆவாரம் குளத்திலும், 75 ஏக்கர் பரப்பளவு உள்ள அன்னூர், அல்லிகுளம் குளத்திலும், நாளை காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை மரக்கன்றுகள் பராமரித்தல், களைகளை அகற்றுதல் உள்ளிட்ட களப்பணி நடக்கிறது.

'ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள், களப்பணியில் பங்கேற்று உதவலாம்,' என கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us