Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ யானை வழித்தட விவகாரம்: போராட்டம் நடத்த முடிவு

யானை வழித்தட விவகாரம்: போராட்டம் நடத்த முடிவு

யானை வழித்தட விவகாரம்: போராட்டம் நடத்த முடிவு

யானை வழித்தட விவகாரம்: போராட்டம் நடத்த முடிவு

ADDED : ஜூன் 04, 2024 12:15 AM


Google News
ஊட்டி;ஊட்டி மசினகுடியில் யானை வழித்தட வரைவு திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில், புதிதாக வர உள்ள யானை வழித்தட வரைவு திட்டம் குறித்து, எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் தலைமையில் மசினகுடியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், மசினகுடி பகுதியை சேர்ந்த விவசாயிகள், வாகன ஓட்டுனர்கள், அனைத்து சங்க, கட்சியினர் உட்பட, பொதுமக்கள் பங்கேற்றனர்.

அதில், 'சமீபத்தில் தமிழக வனத்துறை வெளியிட்ட புதிய யானை வழித்தட அறிவிப்பை உடனடியாக கைவிட வேண்டும்; யானை வழித்தடம் என்று கூறி வாழை தோட்டம் கிராமத்தில் வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்றும் முயற்சியை கைவிட வேண்டும்;

இந்த பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், வரும், 5ம் தேதிக்கு பின், தொடர் போராட்டம் நடத்தப்படும்,' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us