ADDED : ஜூன் 20, 2024 04:54 AM
சூலுார், : ஆதிரை அறக்கட்டளை சார்பில், சூலுார் அடுத்த காடாம்பாடி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், 18 லட்சம் ரூபாய் செலவில், புதிய வகுப்பறை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. தொடர்ந்து, அந்தமானில் நடந்த சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், காடாம்பாடி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.