Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.19.80 லட்சத்தில் நலத்திட்டம்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.19.80 லட்சத்தில் நலத்திட்டம்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.19.80 லட்சத்தில் நலத்திட்டம்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.19.80 லட்சத்தில் நலத்திட்டம்

ADDED : செப் 16, 2025 02:00 AM


Google News
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 462 மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். தொடர்ந்து, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலம், கூட்டுறவு துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 9 பயனாளி

களுக்கு, 19 லட்சத்து, 80,880 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us