Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வேல், கத்தி பிரதிஷ்டை பூஜை

வேல், கத்தி பிரதிஷ்டை பூஜை

வேல், கத்தி பிரதிஷ்டை பூஜை

வேல், கத்தி பிரதிஷ்டை பூஜை

ADDED : செப் 15, 2025 02:05 AM


Google News
மோகனுார்:மோகனுார் அடுத்த மணப்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. நேற்று முன்தினம், மணப்பள்ளி காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடி, வேல் மற்றும் கத்திக்கு பூஜை செய்து, தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

தொடர்ந்து, பெரியசாமிக்கு வேல் பிரதிஷ்டை மற்றும் அங்காள பரமேஸ்வரிக்கு கத்தி பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

நேற்று காலை, 8:00 மணிக்கு, மகா கணபதி, லட்சுமி, அஸ்திர ஹோமம் நடந்தது. அதையடுத்து, தோரண வாயில் அபிஷேகம், பரிவார தெய்வங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us