Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல், மோகனுார் உழவர் சந்தையில் ரூ.28.49 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

நாமக்கல், மோகனுார் உழவர் சந்தையில் ரூ.28.49 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

நாமக்கல், மோகனுார் உழவர் சந்தையில் ரூ.28.49 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

நாமக்கல், மோகனுார் உழவர் சந்தையில் ரூ.28.49 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

ADDED : மே 19, 2025 02:07 AM


Google News
நாமக்கல்: நாமக்கல், மோகனுார் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 71 டன் காய்கறி, 28.49 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

நாமக்கல் கோட்டை சாலை மற்றும் மோகனுாரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும் காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்-களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிக அளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்-களை வாங்கி செல்வது வழக்கம்.ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மொத்தம், 251 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தி-ருந்தனர். 55,247 கிலோ காய்கறி, 16,208 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என மொத்தம், 71,475 கிலோ எடையுள்ள விளை-பொருட்கள், விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம், 28 லட்-சத்து, 49,657 ரூபாய்க்கு விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us