Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் ரூ.27.89 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் ரூ.27.89 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் ரூ.27.89 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் ரூ.27.89 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

ADDED : ஜூன் 23, 2025 05:05 AM


Google News
நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 62 டன் காய்க-றிகள், 27.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில், உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை அறுவடை செய்து, இங்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்-றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்-கிழமைகளில் அதிக அளவில் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு ஒருவாரத்திற்கு தேவையான காய்கறி, பழங்-களை வாங்கி செல்வது வழக்கம்.அதன்படி, நேற்று உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியா-பாரம் நடந்தது. 202 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி-களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதில், 48,190 கிலோ காய்கறிகள், 13,710 கிலோ பழங்கள், 25 கிலோ பூக்கள் என மொத்தம், 61,925 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்-டன. அவற்றை, 12,385 வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 27 லட்சத்து, 89,520 ரூபாய்க்கு விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us