/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வாசலுார்பட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குதுாகலம் வாசலுார்பட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்
வாசலுார்பட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்
வாசலுார்பட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்
வாசலுார்பட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்
ADDED : ஜூன் 23, 2025 04:59 AM
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்குகி-றது. இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்-றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
விடுமுறை நாளான நேற்று, கொல்லிமலைக்கு சுற்றுலா பயணி-களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
அவர்கள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம்ம அருவி, மாசிலா அருவி, சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனர். பின், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, அரப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், பெரியசாமி கோவிலுக்கு சென்று குடும்பத்தி-னருடன் ஜாலியாக பொழுதை கழித்தனர்.
பின், கொல்லிமலையில் தங்களது சுற்று பயணத்தை முடித்து-விட்டு கீழே வரும் சுற்றுலா பயணிகள், சோளக்காட்டில் உள்ள பழங்குடியினர் சந்தையில் கொல்லிமலை வாழைப்பழம், பலாப்-பழம், அன்னாசி மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிச்
சென்றனர்.