Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மெல்ல உயரும் தக்காளி விலை 2 வாரத்தில் ரூ.8 அதிகரிப்பு

மெல்ல உயரும் தக்காளி விலை 2 வாரத்தில் ரூ.8 அதிகரிப்பு

மெல்ல உயரும் தக்காளி விலை 2 வாரத்தில் ரூ.8 அதிகரிப்பு

மெல்ல உயரும் தக்காளி விலை 2 வாரத்தில் ரூ.8 அதிகரிப்பு

ADDED : ஜூன் 29, 2025 12:53 AM


Google News
ராசிபுரம், ராசிபுரம் உழவர் சந்தைக்கு நாமகிரிப்பேட்டை யூனியன், மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, ராசிபுரம், வெண்ணந்துார் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

நேற்று நடந்த உழவர் சந்தையில் தக்காளி கிலோ, 28 ரூபாய், கத்திரிக்காய், 50, வெண்டை, 28, புடலை, 35, பீர்க்கன், 45, பாகல், 60, சுரைக்காய், 14, பச்சை மிளகாய், 55, முருங்கை, 80, சின்ன வெங்காயம், 55, பெரிய வெங்காயம், 40, முட்டைகோஸ், 20, கேரட், 80, பீன்ஸ், 90, பீட்ரூட், 60 ரூபாய்க்கு விற்பனையாகின. இதேபோல், வாழைப்பழம், 40 ரூபாய், கொய்யா, 60, பப்பாளி, 25, தர்பூசணி, 12, எலுமிச்சை,75, விலாம்பழம், 40 ரூபாய்க்கு விற்பனையாகின.

நேற்று ஒரே நாளில், 201 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 25,710 கிலோ காய்கறி, 9,960 கிலோ பழங்கள், 340 கிலோ பூக்கள் என மொத்தம், 36,010 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 15.9 லட்சம் ரூபாயாகும். 7,026 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில், 36 டன் காய்கறி, பழங்கள் விற்பனையாகின.

தக்காளி விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. கடந்த, இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு கிலோ தக்காளி, 20 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று வரை, 8 ரூபாய் உயர்ந்து, 28 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் உயரும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us