/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ராகவேந்திரா பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா ராகவேந்திரா பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா
ராகவேந்திரா பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா
ராகவேந்திரா பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா
ராகவேந்திரா பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா
ADDED : ஜூன் 27, 2025 01:20 AM
சேந்தமங்கலம்,சேந்தமங்கலம் அடுத்துள்ள, அக்கியம்பட்டி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா நடந்தது. அக்கியம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும், குரு ராகவேந்திரா கோவிலில் கோமாதா பூஜை, குங்கும அர்ச்சனை மற்றும் குரு வார வழிபாடு ஆகிய மூன்று நிகழ்ச்சிகளும் நேற்று நடைபெற்றது. காலையில் கோமாதா பூஜை நடந்தது.
தொடர்ந்து குங்கும அர்ச்சனை, அதன் பின்பு மூலவர் குரு ராகவேந்திரா, லட்சுமி நரசிம்மர், ராமர், சீதை மற்றும் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் நடந்தன. பின், அன்னதானம் நடைபெற்றது. சேந்தமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.