Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வரத்து குறைவால் பட்டுக்கூடு விலை உயர்வு

வரத்து குறைவால் பட்டுக்கூடு விலை உயர்வு

வரத்து குறைவால் பட்டுக்கூடு விலை உயர்வு

வரத்து குறைவால் பட்டுக்கூடு விலை உயர்வு

ADDED : செப் 09, 2025 02:16 AM


Google News
ராசிபுரம், ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 437 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது.

இதில், அதிகபட்சம் கிலோ, 741 ரூபாய், குறைந்தபட்சம், 585 ரூபாய், சராசரி, 669 ரூபாய் என, 437 கிலோ பட்டுக்கூடு, இரண்டு லட்சத்து, 93,063 ரூபாய்க்கு விற்பனையானது. தட்பவெட்ப நிலை மாற்றத்தால் பட்டு உற்பத்தி குறைவாகியுள்ளது.

மற்ற இடங்களில் பட்டுக்கூடு குறைவாக வருவதால், விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் பட்டுக்கூடு விலை அதிகபட்சம் கிலோ, 600 ரூபாய்க்கு தான் விற்பனையானது. ஆனால், நேற்று, 741 ரூபாய்க்கு விற்றது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us