Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 'கனவு இல்லம்' பயனாளிகள் தேர்வு

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 'கனவு இல்லம்' பயனாளிகள் தேர்வு

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 'கனவு இல்லம்' பயனாளிகள் தேர்வு

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 'கனவு இல்லம்' பயனாளிகள் தேர்வு

ADDED : ஜூலை 02, 2024 07:58 AM


Google News
நாமக்கல்: மாவட்டத்தில், எட்டு ஒன்றியங்களில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், 'கனவு இல்லம்' திட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 321 கிராம பஞ்.,களில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம், திருச்செங்கோடு, எலச்சிப்பா-ளையம், பள்ளிப்பாளையம் ஒன்றியங்களில் உள்ள கிராம பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. நேற்று, நாமக்கல், புதுச்சத்-திரம், ராசிபுரம், மோகனுார், கபிலர்மலை, வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி ஆகிய, எட்டு ஒன்றியங்களில் உள்ள கிராம பஞ்.,களில் கிராம சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், பழுதடைந்த ஊரக வீடுகளை சீர-மைத்தல் திட்டம் மற்றும் 'கனவு இல்லம்' திட்டம் செயல்படுத்த, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். பஞ்., துணைத்தலைவர் ராமதாஸ், எஸ்.ஐ., குணசேகரன், வி.ஏ.ஓ., தமிழ-ரசி, பற்றாளர் தேன்மொழி உள்பட பலர் பங்கேற்-றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us