Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்

ADDED : செப் 05, 2025 01:15 AM


Google News
நாமக்கல், நாமக்கல்லில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினரின், இரண்டாவது நாளாக நேற்று போராட்டம் நீடித்தது. இதனால், பல்வேறு சான்றிதழ்களை பெற முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையில், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப அரசாணை வெளியிட வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்து, வாரத்திற்கு 2 முகாம்கள் மட்டுமே நடத்த வேண்டும்.

மேலும் இத்திட்ட பணிகளை மேற்கொள்ள உரிய காலஅவகாசம், கூடுதலான தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

வேலைநிறுத்த போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் தாசில்தார் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வருவாய்த்துறை தொடர்பான பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை, பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us