Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சீராப்பள்ளி ஓடையை சுத்தம் செய்ய கோரிக்கை

சீராப்பள்ளி ஓடையை சுத்தம் செய்ய கோரிக்கை

சீராப்பள்ளி ஓடையை சுத்தம் செய்ய கோரிக்கை

சீராப்பள்ளி ஓடையை சுத்தம் செய்ய கோரிக்கை

ADDED : ஜூன் 28, 2025 07:57 AM


Google News
நாமகிரிப்பேட்டை: வடுகம் அடுத்த சீராப்பள்ளி ஓடையில் உள்ள புதரை சுத்தம் செய்ய வேண்டும்.

நாமகிரிப்பேட்டை அடுத்த, வடுகம் ஊராட்சியில் வடுகம் ஏரி உள்ளது. இதையொட்டி சீராப்பள்ளி ஓடை அமைந்துள்ளது. இதன் வழியாக சீராப்பள்ளி ஏரி வரை தண்ணீர் செல்லும். இந்த ஓடையின் இரண்டு பக்கமும் முள் செடி உள்ளிட்ட புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால், மழை காலங்களில் நீர் செல்வதில் தடை ஏற்படுகிறது.

ஓடையில் தண்ணீர் சென்றால், இப்பாதையில் உள்ள நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள், போர்வெல்களில் நீர்மட்டம் உயரும். எனவே, ஓடையில் உள்ள புதர்களை மழைக்காலம் தொடங்குவதற்குள் சுத்தம் செய்ய வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us