Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஊராட்சி அலுவலக கட்டடம் விரைவில் கட்ட கோரிக்கை

ஊராட்சி அலுவலக கட்டடம் விரைவில் கட்ட கோரிக்கை

ஊராட்சி அலுவலக கட்டடம் விரைவில் கட்ட கோரிக்கை

ஊராட்சி அலுவலக கட்டடம் விரைவில் கட்ட கோரிக்கை

ADDED : ஜூன் 09, 2025 04:33 AM


Google News
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை யூனியன், ஊனாந்தாங்கல் ஊராட்சியில், 3,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கான அலுவலக கட்டடம் ஊனாந்தாங்கல் கிரா-மத்தில் கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.

கட்-டடம் சேதமடைந்ததாலும், இடம் வசதி இல்லாததாலும் அருகில் உள்ள மகளிர் குழு கட்டடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. இந்த இடத்திற்கு அலுவலகத்தை மாற்றி, ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் கட்டடப்பணியை தொடங்கினர். ஆனால், பணி இன்னும் முழுவதும் முடிய-வில்லை. மகளிர் குழுவுக்கான கட்டடத்தில் ஊராட்சி அலுவ-லகம் இயங்குவதால், மகளிர் குழுவினர் மிகவும் சிரமப்படுகின்-றனர். அவர்களுடைய பொருட்களை அறைக்கு வெளியே வைத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, ஊனாந்தாங்கல் ஊராட்சி அலு-வலகம் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us