ADDED : செப் 25, 2025 02:21 AM
சேந்தமங்கலம், :சேந்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று பரவலாக கனமழை பெய்தது.சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, ராமநாதபுரம் புதுார், வெண்டாங்கி, கொல்லிமலை அடிவாரம் உள்ளிட்ட பல பகுதிகளில், நேற்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணியளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பலத்த காற்றுடன், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.