Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நீதிமன்றத்தில் ஆஜராகாத வாலிபருக்கு சிறை

நீதிமன்றத்தில் ஆஜராகாத வாலிபருக்கு சிறை

நீதிமன்றத்தில் ஆஜராகாத வாலிபருக்கு சிறை

நீதிமன்றத்தில் ஆஜராகாத வாலிபருக்கு சிறை

ADDED : ஜூலை 03, 2025 01:52 AM


Google News
ஈரோடு, ஈரோட்டில், திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஈரோடு, கருங்கல்பாளையம் கல்லு பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த சண்முகம் மகன் கார்த்தி, 20. கடந்த, 2020ல் ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு, ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்--2ல் நடந்து வருகிறது. இரண்டு மாதங்களாக வழக்கின் விசாரணைக்கு, நீதிமன்றத்தில் கார்த்தி ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.

கார்த்திக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். ஈரோடு டவுன் போலீசார் தலைமறைவாக இருந்த கார்த்தியை பிடித்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us