Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

ADDED : அக் 22, 2025 01:15 AM


Google News
நாமக்கல், தமிழகத்தில் ஆண்டு தோறும், அக்., 21ல், 'காவலர் வீரவணக்க நாள்' அனுசரிக்கப்படுகிறது. 1959ல், லடாக் பகுதியில், சீன படைகள் நடத்திய திடீர் தாக்குதலில், 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூறும் வகையிலும், காவல் துறையில் பணியில் இருந்த போது, உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும், இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

அதையொட்டி, நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில், கலெக்டர் துர்கா மூர்த்தி, எஸ்.பி., விமலா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, 81 குண்டுகள் முழுங்க மரியாதை செலுத்தப்பட்டது. கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us