Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கன மழை பெருக்கெடுத்த வெள்ளத்தால் மக்கள் அவதி

இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கன மழை பெருக்கெடுத்த வெள்ளத்தால் மக்கள் அவதி

இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கன மழை பெருக்கெடுத்த வெள்ளத்தால் மக்கள் அவதி

இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கன மழை பெருக்கெடுத்த வெள்ளத்தால் மக்கள் அவதி

ADDED : செப் 19, 2025 01:52 AM


Google News
நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், அதிகபட்சமாக குமாரபாளையம் பகுதியில், 19 மி.மீ., மழை பதிவானது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு மி.மீ., வருமாறு:

குமாரபாளையம்,- 19, கொல்லிமலை,- 15, மோகனுார்,- 10, எருமப்பட்டி, -5, நாமக்கல், -3, திருச்செங்கோடு, -2, சேந்தமங்கலம்-, 1 என, மாவட்டத்தின் மொத்த மழையளவு, 55 மி.மீ.,

நாமக்கல் மாநகரில், நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை, 5:30 மணி அளவில் திடீரென மழை கொட்ட தொடங்கியது.

இந்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால் நாமக்கல்-பரமத்தி சாலை சந்திப்பு, சேலம் சாலை கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாக ஓட்டி சென்றனர். இந்த மழை காரணமாக இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

* சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதியில், நேற்று மாலை, 5:00 மணி முதல் பலத்த காற்று வீச தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

* ராசிபுரம் பகுதியில் காலை முதல் வெயில் அதிகம் இருந்தது. மாலையில் வெயில் குறைந்து, வானம் இருண்டது. இரவு, 7:30 மணிக்கு காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. 2 மணிநேரம் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை

பாதிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us