Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தியால் பீதி

துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தியால் பீதி

துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தியால் பீதி

துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தியால் பீதி

ADDED : மே 19, 2025 02:41 AM


Google News
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டியில் மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் நடமாடியதாக வதந்தி பரவியதால், மக்கள் பீதியடைந்தனர்.

சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., திருமலைப்பட்டி பிரிவு அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு, துப்பாக்கி வைத்துக்கொண்டு மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தி பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

இதையடுத்து, சேந்தமங்கலம் எஸ்.ஐ., தமிழ்குமரன் மற்றும் போலீசார் காளப்பநாய்க்கன்பட்டி, காரவள்ளி சாலையில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, கொல்லி

மலையை சேர்ந்த, இரண்டு பேர், சரக்கு ஆட்டோவில் மிளகு விற்பனைக்காக வந்ததும், நள்ளிரவு என்பதால் வழி தெரியாமல் ஒரு வீட்டில் சென்று வழி கேட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திரும்பி சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us