ADDED : மார் 11, 2025 07:06 AM
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, அண்ணா நகர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, ப.வேலுார் போலீசருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.ஐ., ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, மேற்கு தெரு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, 55, மது விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.