Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமகிரி தாயார் கோவிலில் 22ல் நவராத்திரி விழா துவக்கம்

நாமகிரி தாயார் கோவிலில் 22ல் நவராத்திரி விழா துவக்கம்

நாமகிரி தாயார் கோவிலில் 22ல் நவராத்திரி விழா துவக்கம்

நாமகிரி தாயார் கோவிலில் 22ல் நவராத்திரி விழா துவக்கம்

ADDED : செப் 20, 2025 01:59 AM


Google News
நாமக்கல் :நாமக்கல் கோட்டையில் பிரசித்திபெற்ற நாமிகிரி தாயார் உடனுறை நரசிம்மர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. நாமகிரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு நவராத்திரி விழா, வரும், 22ல் துவங்கி, அக்., 2 வரை, 9 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை, 8:00 மணிக்கு, அரங்கநாயகி தாயார் பேட்டை திருவீதி உலாவும், காலை, 9:00 மணிக்கு, நாமகிரித்தாயார் கோட்டை திருவீதி உலாவும் நடக்கிறது.

இரவு, 7:00 மணிக்கு, நரசிம்ம சுவாமி, ஒவ்வொரு அவதாரத்தில், நாமகிரித்தாயார் சன்னதியில் எழுந்தருளி, மகா தீபாராதனையும், கொலுமண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தினமும், மாலை, 6:00 மணிக்கு, லட்சுமிநாராயணர் சன்னதி முன் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, அறங்காவலர் குழுத்தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் செல்வசீராளன், ராம சீனிவாசன், டாக்டர் மல்லிகா, ரமேஷ்பாபு உள்ளிட்டோர் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us