Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமகிரிப்பேட்டை மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா

நாமகிரிப்பேட்டை மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா

நாமகிரிப்பேட்டை மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா

நாமகிரிப்பேட்டை மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா

ADDED : மே 10, 2025 01:08 AM


Google News
நாமகிரிப்பேட்டை,

நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவில், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வந்த அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி, கடந்த, இரண்டு வாரங்களுக்கு முன் கொடியேற்ற விழா நடந்தது. தொடர்ந்து, கம்பம் நடும் விழா நடந்தது. அதையொட்டி தினமும் சிறப்பு அலங்காரம், மண்டகப்படி ஊர்வலம், பால் அபிஷேகம், அலகு குத்தும் நிகழ்ச்சி, அக்னி சட்டி ஊர்வலம் ஆகியவை நடந்து வருகிறது.

கடந்த புதன் கிழமை காலை, தீமிதி விழாவும், மாலை தேர் திருவிழாவும் நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் ஆபரண உடையணிந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பஸ் ஸ்டாண்டில் வாணவேடிக்கை நடத்தப்பட்டது. தொடர்ந்து, கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், கொடியிறக்கமும் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us