/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அதிக மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி அதிக மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி
அதிக மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி
அதிக மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி
அதிக மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி
ADDED : ஜூன் 09, 2025 04:31 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், அம்மன் நகர் பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் பணியாற்றி வந்தவர் சண்முகம், 65; இவர் மனைவி மற்றும் குடும்பத்தாரை விட்டு பிரிந்து, தனியாகி வசித்து வந்தார்.
கடந்த, 6ல், வேலைக்கான கூலி பணத்தை வாங்கிக்கொண்டு வந்த சண்முகம், மறுநாள் விசைத்தறி கூடத்திற்கு வேலைக்கு வர-வில்லை. உடன் பணியாற்றுபவர்கள் பல்வேறு இடங்களில் தேடி-யுள்ளனர். அப்போது, அரசு மருத்துவமனை முன் மயங்கி கிடப்ப-தாக தகவல் கிடைத்தது. அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ-மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.