Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொல்லிமலையில் 700 பேருக்கு வீடு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்

கொல்லிமலையில் 700 பேருக்கு வீடு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்

கொல்லிமலையில் 700 பேருக்கு வீடு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்

கொல்லிமலையில் 700 பேருக்கு வீடு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்

ADDED : ஜூன் 28, 2025 07:59 AM


Google News
கொல்லிமலை: கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., கலைஞர் வீடு வழங்கும் திட்டம், முதல்வரின் வீடுகள் மறு கட்டமைப்பு திட்டம், விவசாயிகளுக்கு புதிய கிணறு அமைத்தல் உள்ளிட்ட, 80 பயனாளிகளுக்கு, 23 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார்.

அவர் பேசுகையில், ''கொல்லிமலையில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், 700 பயனாளிகளுக்கு வீடு கட்ட அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கீடு செய்து கட்டட பணி நடந்து வருகிறது. கொல்லிமலை மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட, பழங்குடியினர் நல வாரியம் உருவாக்கி, கொல்லிமலை தேவனுார் நாடு ஊராட்சியை சேர்ந்த கனிமொழி காளியப்பனை வாரிய தலைவராக நியமனம் செய்து பெருமை தேடி தந்துள்ளார். முதன்மை சுற்றுலா தலமாக கொல்லிமலையை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார். பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்கள் காளியப்பன், பாலசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈஸ்வரன், பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us