Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரை மணி நேரம் கொட்டிய மழை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

அரை மணி நேரம் கொட்டிய மழை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

அரை மணி நேரம் கொட்டிய மழை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

அரை மணி நேரம் கொட்டிய மழை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

ADDED : செப் 07, 2025 12:48 AM


Google News
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஒரு சில இடங்களில், லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றும் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. தொடர்ந்து, மழைவரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, 5:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. லேசாக தொடங்கிய மழை சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது.

அதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்களும், ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது. மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாமக்கல் பரமத்தி சாலை, சேலம் சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. நாமக்கல் நகரில் அரை மணி நேரம் பெய்த கனமழையால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us