Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

ADDED : மே 13, 2025 02:15 AM


Google News
நாமக்கல் நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருத்தேர் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதையொட்டி, நேற்று முன்தினம் சக்தி அழைப்பு, காப்பு கட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை, அம்மனுக்கு பூச்சாட்டு விழா நடந்தது. எஸ்.பி.புதுார், ஏ.எஸ்.பேட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

வரும், 18ல் மறுகாப்பும், 25ல் வடிசோறு, மாவிளக்கு பூஜை, 26ல், அபிஷேகம், ஆராதனை, அம்மன் அலங்காரம், ரத உற்சவம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல், அன்று இரவு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 27ல் மாவிளக்கு, பொங்கல், வசந்தோற்சவம், 28ல் மஞ்சள் உற்சவம், 29ல் கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us