Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல், திருச்செங்கோட்டில் 20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், திருச்செங்கோட்டில் 20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், திருச்செங்கோட்டில் 20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், திருச்செங்கோட்டில் 20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ADDED : ஜூன் 18, 2025 01:21 AM


Google News
நாமக்கல், 'நாமக்கல் மாவட்டத்தில், வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும், 20ல், நாமக்கல், திருச்செங்கோட்டில் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில், வரும், 20 காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. நாமக்கல் கோட்டத்திற்கு, நாமக்கல் பி.டி.ஓ., அலுவலகத்திலும், திருச்செங்கோடு கோட்டத்திற்கு, பரமத்தி பி.டி.ஓ., அலுவலகத்திலும்

நடக்கிறது.

கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து தீர்வு

பெறலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us