ADDED : செப் 15, 2025 01:37 AM
நாமக்கல்:நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 515 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த, 15 நாட்களாக, 515 காசாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நேற்று 5 காசு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:
சென்னை, 570, ஐதராபாத், 535, விஜயவாடா, 550, பர்வாலா, 537, மும்பை, 580, மைசூரு, 565, பெங்களூரு, 565, கோல்கட்டா, 595, டில்லி, 557 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டைக்கோழி ஒரு கிலோ, 107 ரூபாய், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், கறிக்கோழி ஒரு கிலோ, 123 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.