/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ முட்டை விலை 20 காசு சரிவு: பண்ணையாளர் கவலை முட்டை விலை 20 காசு சரிவு: பண்ணையாளர் கவலை
முட்டை விலை 20 காசு சரிவு: பண்ணையாளர் கவலை
முட்டை விலை 20 காசு சரிவு: பண்ணையாளர் கவலை
முட்டை விலை 20 காசு சரிவு: பண்ணையாளர் கவலை
ADDED : ஜூன் 16, 2025 07:31 AM
நாமக்கல்: நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 560 காசுக்கு விற்ற முட்டை விலை, 20 காசு குறைத்து, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த, மே, 1ல், 450 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் விலை, படிப்படியாக ஏற்றம் காணப்பட்டு, 29ல், 560 காசாக உயர்ந்தது.
இதையடுத்து, 18 நாட்களாக, அதே நிலை நீடித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில், 20 காசு குறைக்கப்பட்டு, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, பண்ணையாளர்களை கவலையடைய செய்துள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை(காசுகளில்) நிலவரம்: சென்னை, 620, ஐதராபாத், 540, விஜயவாடா, 515, பர்வாலா, 460, மும்பை, 590, மைசூரு, 610, பெங்களூரு, 605, கோல்கட்டா, 560, டில்லி, 485 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டைக்கோழி கிலோ, 107 ரூபாய், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், கறிக்கோழி ஒரு கிலோ, 120 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.