/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கிழக்கு கரை வாய்க்கால் துார்வாரும் பணி துவக்கம் கிழக்கு கரை வாய்க்கால் துார்வாரும் பணி துவக்கம்
கிழக்கு கரை வாய்க்கால் துார்வாரும் பணி துவக்கம்
கிழக்கு கரை வாய்க்கால் துார்வாரும் பணி துவக்கம்
கிழக்கு கரை வாய்க்கால் துார்வாரும் பணி துவக்கம்
ADDED : மே 10, 2025 01:11 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், 10 கி.மீ., துாரத்திற்கு மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் செல்கிறது. ஆண்டுதோறும் ஆக., முதல் டிச., வரை, மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
இந்த தண்ணீரை பயன்படுத்தி, 10,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். கடந்த, ஐந்து மாதங்களாக வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. இதனால் வாய்க்காலின் பெரும் பாலான இடங்களில் முட்புதர் அதிகளவு வளர்ந்து காணப்படுகிறது. மேலும், குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
நேற்று, குமாரபாளையம் நீர்வளத்துறை சார்பில், வாய்க்கால் பராமரிப்பு பணி துவங்கப்பட்டது. இதில், பொக்லைன் மூலம் முட்புதர், குப்பை, கழிவுகள் அகற்றும் பணி மற்றும் கரை சீரமைப்பு பணி நடந்து வருகிறது.


