Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி

ADDED : ஜூன் 13, 2025 01:36 AM


Google News
வெண்ணந்துார், குட்டலாடம்பட்டி பஞ்., கள்ளமலை அடிவாரம் அருகே, சேலம் செல்லும் பிரதான சாலை சேதமடைந்திருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

ராசிபுரம் பகுதியில் இருந்து, குட்டலாடம்பட்டி வழியாக சேலம் செல்லும் சாலை அமைந்துள்ளது. இதன் வழியாக மில்களுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள், பணியாளர்களை கூட்டி செல்லும் வாகனங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள், டிப்பர் லாரிகள், டிராக்டர்கள், டூவீலர்கள் சென்று வருகின்றன. இந்த சாலை ஆங்காங்கே சேதமடைந்து, ஜல்லி கற்கள் சிதறி கிடக்கின்றன. குறிப்பாக, வெண்ணந்துார் ஒன்றியம், குட்டலாடம்பட்டி பஞ்., கள்ளமலை அடிவாரம் அருகே மாதக்கணக்கில் தார்ச்சாலை சேதமடைந்து காணப்படுகிறது.

இதனால் வாகனங்களில் செல்வோர் தினமும் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில், டூவீலர்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். விபரீதம் ஏற்படும் முன், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us