Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரூ.2.5 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரூ.2.5 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரூ.2.5 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரூ.2.5 கோடிக்கு மாடுகள் விற்பனை

ADDED : ஜன 08, 2025 03:10 AM


Google News
ரூ.2.5 கோடிக்கு மாடுகள் விற்பனை

புதுச்சத்திரம், புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் ‍மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தை க்கு, நாமக்கல், சேந்தமங்கலம், புதுச்சத்திரம் உள்ளிட்ட யூனியன்களில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சில நாட்களாக, கேரளா வியாபாரிகள் வரத்து குறைவாக இருந்ததால், மாடுகள் விற்பனை மந்தமாக காணப்பட்டது. ஆனால், கடந்த வாரம் முதல் மாட்டுச்சந்தைக்கு கேரளாவில் இருந்து மாடுகள் வாங்க வரும் வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளதால், மாடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. நேற்று நடந்த மாட்டுச்சந்தையில், 2.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us