Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தொடர் மழையால் அப்பள உற்பத்தி பாதிப்பு

தொடர் மழையால் அப்பள உற்பத்தி பாதிப்பு

தொடர் மழையால் அப்பள உற்பத்தி பாதிப்பு

தொடர் மழையால் அப்பள உற்பத்தி பாதிப்பு

ADDED : ஜூலை 03, 2025 01:45 AM


Google News
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை பகுதியில் தொடர் மழை, வெயில் குறைவாக இருப்பதால் அப்பள உற்பத்தி பாதிக்கப்பட்டுள்து.

ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் கடந்த, இரண்டு வாரங்களாக தொடர்ந்து துாறல் மழை பெய்து வந்தது. தற்போது, மழை நின்றாலும் வெயில் குறைந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி பகுதிகளில் மரவள்ளி கிழங்கு மாவில் அப்பளம் உற்பத்திசெய்வது மிகவும் பிரபலம். இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிசைத்தொழிலாக அப்பள உற்பத்தியை செய்து வருகின்றனர். வேகவைத்து, வெயிலில் நன்றாக காய வைத்துதான் அப்பளம் தயாரிக்கப்படுகிறது.

தொடர் மழை காரணமாக நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதியில் அப்பளம் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பள தொழிலாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

தொடர் வேலை இழப்பால் தொழிலாளர்கள் விவசாய கூலி வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us