/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தேங்காய் பருப்பு ரூ.23 லட்சத்துக்கு ஏலம் தேங்காய் பருப்பு ரூ.23 லட்சத்துக்கு ஏலம்
தேங்காய் பருப்பு ரூ.23 லட்சத்துக்கு ஏலம்
தேங்காய் பருப்பு ரூ.23 லட்சத்துக்கு ஏலம்
தேங்காய் பருப்பு ரூ.23 லட்சத்துக்கு ஏலம்
ADDED : செப் 19, 2025 01:19 AM
ப.வேலுார், ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. இந்த சந்தைக்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். கடந்த வாரம் நடந்த ஏலத்திற்கு, 14,185 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சம் கிலோ, 232.69 ரூபாய், குறைந்தபட்சம், 222.22 ரூபாய், சராசரி, 231.89 ரூபாய் என, 31 லட்சத்து, 52,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
இதேபோல், நேற்று நடந்த ஏலத்திற்கு, 10,360 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சம் கிலோ, 234.99 ரூபாய், குறைந்தபட்சம், 228.19 ரூபாய், சராசரி, 234.89 ரூபாய் என, 23 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.