/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தேங்காய் பருப்பு ஏலம் கிலோவுக்கு ரூ.2 உயர்வுதேங்காய் பருப்பு ஏலம் கிலோவுக்கு ரூ.2 உயர்வு
தேங்காய் பருப்பு ஏலம் கிலோவுக்கு ரூ.2 உயர்வு
தேங்காய் பருப்பு ஏலம் கிலோவுக்கு ரூ.2 உயர்வு
தேங்காய் பருப்பு ஏலம் கிலோவுக்கு ரூ.2 உயர்வு
ADDED : ஜூன் 07, 2024 12:15 AM
ப.வேலுார் : ப.வேலுார் அருகே, வெங்கமேட்டில் தேசிய வேளாண்மை சந்தை செயல்பட்டு வருகிறது.
இங்கு, வியாழக்கிழமை தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதி விவசாயிகள், தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாவட்ட வியாபாரிகளும் ஏலம் எடுக்க வருகின்றனர்.கடத்த வாரம் நடந்த ஏலத்திற்கு, 3,450 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சம் கிலோ, 91.60 ரூபாய், குறைந்தபட்சம், 89.01 ரூபாய், சராசரி, 91.21 ரூபாய் என, மொத்தம், 2 லட்சத்து, 56,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.இதேபோல், நேற்று நடந்த ஏலத்திற்கு, 5,840 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சம் கிலோ, 93.19 ரூபாய், குறைந்தபட்சம், 90.79 ரூபாய், சராசரி, 92.99 ரூபாய் என, மொத்தம், 3 லட்சத்து, 98,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட தேங்காய் பருப்பு கிலோவுக்கு, 2 ரூபாய் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.