Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/செம்மொழி நாள்' பேச்சு, கட்டுரை போட்டி

செம்மொழி நாள்' பேச்சு, கட்டுரை போட்டி

செம்மொழி நாள்' பேச்சு, கட்டுரை போட்டி

செம்மொழி நாள்' பேச்சு, கட்டுரை போட்டி

ADDED : மே 11, 2025 03:02 AM


Google News
நாமக்கல், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான வரும், ஜூன், 3ல், செம்மொழி நாள் விழாவாக, நடப்பு ஆண்டில் கொண்டாடப்படுகிறது. தமிழுக்கு செம்மொழி தகுதி பெற்று தந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெருமையை போற்றிடும் வகையில், அவர் பிறந்த நாளான, வரும் ஜூன், 3ல், தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும், 'செம்மொழி நாள்' விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்பட்டு, வரும் ஜூன், 3ல் நடக்கும், 'செம்மொழி நாள்' விழாவில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, நேற்று, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், பேச்சு, கட்டுரை போட்டி நடந்தது.

தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் பாரதி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு போட்டிகளை துவக்கி வைத்தார். அதில், அரசு, அரசு உதவி பெறும், பொறியியல் கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பேச்சு, கட்டுரை போட்டியில், தலா, 33 பேர் வீதம், 66 மாணவ, மாணவியர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு, முறையே, 10,000, 7,000, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். முதல் பரிசு பெறுபவர், வரும், 17ல், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us