/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாணிக்கவாசகருக்கு குரு பூஜை சிவனடியார்களுக்கு அழைப்புமாணிக்கவாசகருக்கு குரு பூஜை சிவனடியார்களுக்கு அழைப்பு
மாணிக்கவாசகருக்கு குரு பூஜை சிவனடியார்களுக்கு அழைப்பு
மாணிக்கவாசகருக்கு குரு பூஜை சிவனடியார்களுக்கு அழைப்பு
மாணிக்கவாசகருக்கு குரு பூஜை சிவனடியார்களுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 08, 2024 07:30 AM
ப.வேலுார்: ப.வேலுார் சுல்தான்பேட்டை திருஞான சம்பந்தர் மடாலயத்தில், வரும், 10 காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணி வரை, திருவாசகம் முற்றோதல் மற்றும் மாணிக்கவாசகர் குருபூஜை நடக்கிறது.
தொடர்ந்து, பலவகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடக்க உள்ளது. மதியம், 1:00 மணிக்கு, மகேஸ்வர பூஜையுடன் அனைவருக்கும் அன்னதானம், அருட்பிரசாதம் வழங்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணிக்கு நடராஜர் பெருமானுக்கு திருவாசகம் பாடல் நிகழ்ச்சி நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. வரும், 10ல் நடக்கும் குருபூஜையில் அனைத்து சிவனடியார் மற்றும் பொதுமக்கள் தவறாது கலந்துகொண்டு, நால்வர் பெருமானின் அருளை பெறுமாறு, திருஞானசம்பந்த மடாலய நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.