/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பி.ஓ.எஸ்., மிஷினை இணைக்க வசதியாக ரேஷன் கடைகளுக்கு 'புளூ டூத்' தராசுகள் பி.ஓ.எஸ்., மிஷினை இணைக்க வசதியாக ரேஷன் கடைகளுக்கு 'புளூ டூத்' தராசுகள்
பி.ஓ.எஸ்., மிஷினை இணைக்க வசதியாக ரேஷன் கடைகளுக்கு 'புளூ டூத்' தராசுகள்
பி.ஓ.எஸ்., மிஷினை இணைக்க வசதியாக ரேஷன் கடைகளுக்கு 'புளூ டூத்' தராசுகள்
பி.ஓ.எஸ்., மிஷினை இணைக்க வசதியாக ரேஷன் கடைகளுக்கு 'புளூ டூத்' தராசுகள்
ADDED : ஜூன் 12, 2025 01:37 AM
ராசிபுரம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பயன்படுத்தி வரும், பி.ஓ.எஸ்., மிஷின்களை இணைக்க வசதியாக, 'புளூ டூத்' வசதியுடை தராசுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. ரசீதை கையால் எழுதுவதை மாற்றி, பி.ஓ.எஸ்., மிஷின், எலக்ட்ரானிக் தராசு ஆகியவை கொண்டு வந்தனர்.
இதன் மூலம், ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு விபரம் உள்ளிட்டவை தெரிந்துகொள்ள முடியும். மேலும், பயனாளிகளின் விரல் ரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கி வந்தனர். இதில், வயதானவர்களின் விரல் ரேகை சரியாக பதிவாகாததால் சிரமப்பட்டு வந்தனர். இதை தவிர்க்க கண்விழி பதிவு மிஷினை இணைத்தனர். மேலும், வாங்கும் பொருட்களுக்கு ரசீது வழங்கும் வசதி, வாங்கிய பொருட்கள் குறித்து எஸ்.எம்.எஸ்., வசதி ஆகியவை கொண்டுவரப்பட்டன. இதனால், எளிதாகவும், வேகமாகவும் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்க முடிந்தது.மேலும், எலக்ட்ரானிக் தராசுடன், பி.ஓ.எஸ்., மிஷினை இணைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த மாதம், மாவட்டத்தில், 20 கடைகளுக்கு மட்டும் பி.ஓ.எஸ்., மிஷினுடன் இணைக்க வசதியாக, 'புளூ டூத்' தராசுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த, 10ல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 880 ரேஷன் கடைகளுக்கும், 'புளூ டூத்' வசதியுடைய தராசுகள் வழங்கப்பட்டுள்ளன. தராசுடன் பி.ஓ.எஸ்., மிஷினை இணைப்பதால் தேவையில்லாத காலதாமதம் ஏற்படுவதாக நுகர்வோர் விரக்தியுடன் தெரிவித்தனர். பெரும்பாலான கடைகளில் விற்பனையாளர் தான் எடையும் போட வேண்டும்.
ஆனால், தற்போது எடைபோட்டு சரியாக, 10 கிலோ நிறுத்திய பிறகு தான், பி.ஓ.எஸ்., மிஷினில் பில் போட முடியும். அதுவும் விற்பனையாளர் மட்டும் உள்ள கடைகளில் மிகவும் காலதாமதமாகிறது. முன்பு ஒருநாளில், 50 பில்கள் போட்ட கடையில் தற்போது, 30 பில் வரை தான் போட முடிகிறது. இதனால், நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் சலிப்புடன் செல்கின்றனர்.