Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வெள்ள அபாயத்தால் ஆற்றில் குளிக்க தடை

வெள்ள அபாயத்தால் ஆற்றில் குளிக்க தடை

வெள்ள அபாயத்தால் ஆற்றில் குளிக்க தடை

வெள்ள அபாயத்தால் ஆற்றில் குளிக்க தடை

ADDED : ஜூன் 30, 2025 04:35 AM


Google News
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரம் படித்துறை உள்ளது. இந்த படித்துறையில் சுற்று வட்டாரத்தில் சேர்ந்த ஏராளமானோர் குளிக்கவும், துணி துவைக்கவும் தினமும் வருகின்றனர். தற்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றங்கரையோரம் உள்ள படித்துறையில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், எச்சரிக்கை பலகை வைத்து, கயிறு கட்டி பாதுகாப்பு நடவடிக்கையை கலியனுார் பஞ்., நிர்வாகம் செய்துள்ளது. தொடர்ந்து, ஆற்றோர பகுதியை கலியனுார் பஞ்., பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us