/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவிலில் ரூ.68.50 லட்சம் உண்டியல் காணிக்கைஆஞ்சநேயர், நரசிம்மர் கோவிலில் ரூ.68.50 லட்சம் உண்டியல் காணிக்கை
ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவிலில் ரூ.68.50 லட்சம் உண்டியல் காணிக்கை
ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவிலில் ரூ.68.50 லட்சம் உண்டியல் காணிக்கை
ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவிலில் ரூ.68.50 லட்சம் உண்டியல் காணிக்கை
ADDED : ஜூன் 22, 2024 12:26 AM
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
அதில், 68.50 லட்சம் ரூபாய் கிடைத்தது.நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவில்களில், மூன்று மாதத்துக்கு ஒருமுறை பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கடந்த பிப்., 1ல் உண்டியல்கள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று இரு கோவில்களில் உள்ள, 10 உண்டியல்கள் திறக்கப்பட்டன. அவை, ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் வைத்து, காலை, 10:00 முதல், இரவு, 8:45 மணி வரை எண்ணப்பட்டன.நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உதவி ஆணையர் இளையராஜா, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் ஆகியோர் மேற்பார்வையில், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்லுாரி மாணவ, மாணவியர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 68 லட்சத்து, 49,988 ரூபாய், 28 கிராம் தங்கம், 295 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.