Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பேரிகார்டால் தொடரும் விபத்து

பேரிகார்டால் தொடரும் விபத்து

பேரிகார்டால் தொடரும் விபத்து

பேரிகார்டால் தொடரும் விபத்து

ADDED : ஜூன் 06, 2025 01:45 AM


Google News
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அருகே, வைக்கப்பட்டுள்ள பேரிகார்டால் தொடர்ந்து விபத்து நடந்து வருகிறது.

நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, தண்ணீர்பந்தல்காடு காலனி ஆத்துார் பிரதான சாலையில் அமைந்துள்ளது. திருச்செங்கோடு முதல் ஆத்துார் வரை சாலை அகலப்படுத்தும்போது, நாமகிரிப்பேட்டையிலும் சாலை அகலப்படுத்தப்பட்டது. சாலை அகலமானதால், சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் வாகனங்கள் ஆத்துார், நாமகிரிப்பேட்டை வழியாக அதிகளவு வரத்தொடங்கின. சாலை அகலமாக இருப்பதால், இவ்வழியாக வாகனங்கள் வேகமாக செல்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாமகிரிப்பேட்டை தண்ணீர்பந்தல்காடு காலனி பகுதியில், சாலையை கடந்தவர் விபத்தில் இறந்தார்.

இதையடுத்து, இப்பகுதியில் வாகனங்கள் வேகமாக வருவதை தடுக்க, பேரிகார்டு அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினரிடம் போலீசார் ஆலோசித்து அப்பகுதியில், இரு பேரிகார்டுகளை வைத்தனர்.

பேரிகார்டு வைத்த பிறகு அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. வேகமாக வரும் வாகனம் பேரிகார்டு மீது மோதி, அருகில் சென்று அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி காயமடைந்தது முதல், இரண்டு தினங்களுக்கு முன்பு மேஸ்திரி இறந்தது வரை பல்வேறு விபத்துகள் நடந்துள்ளன. மாதம் இரண்டு பேராவது, பேரிகார்டால் விபத்தில் சிக்குகின்றனர்.

தொடர்ந்து விபத்து ஏற்படுவதால், பேரிகார்டை போலீசார் அகற்ற முயன்ற போது அப்பகுதி மக்கள் தடுத்துவிட்டனர். பேரிகார்டு இருந்தால்தான், இப்பகுதியில் மப்சல் பஸ்கள் நின்று செல்லும் என்ற ஒரே காரணத்திற்காக, எடுக்க விடாமல் தடுத்து வருகின்றனர். தொடர்ந்து விபத்துகள் பதிவாகி வருவதை, நெடுஞ்சாலைத்துறையின் கணக்கிட்டு மாற்று ஏற்பாடு செய்யாமல் அலட்சியமாக உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us