Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

ADDED : ஜூலை 02, 2025 02:09 AM


Google News
பள்ளிப்பாளையம், அக்ரஹாரம் பகுதியில், பதுங்கி இருந்த தலைமறைவு குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பாளையம் அருகே ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர் ஜிவனேஸ், 23. இவரை கடந்த, 2024 ஏப்., மாதம் கஞ்சா வழக்கில் பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். பின் ஜாமினில் இருந்து வெளியே வந்த அவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இவரை பள்ளிப்பாளையம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அக்ரஹாரம் பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us