/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் உழவர் சந்தையில் 59 டன் காய்கறி விற்பனை நாமக்கல் உழவர் சந்தையில் 59 டன் காய்கறி விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் 59 டன் காய்கறி விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் 59 டன் காய்கறி விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் 59 டன் காய்கறி விற்பனை
ADDED : செப் 15, 2025 01:39 AM
நாமக்கல்:நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 59 டன் காய்கறிகள், 25.17 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.
நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள், பழங்களை அறுவடை செய்து, நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிக அளவில் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று, வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 198 விவசாயிகள், உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதில், 49,030 கிலோ காய்கறிகள், 10,510 கிலோ பழங்கள் மற்றும் 35 கிலோ பூக்கள் என மொத்தம், 59,575 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்தனர். அவற்றை, 11,915 நுகர்வோர் வாங்கி சென்றனர். அதன் மூலம், 25 லட்சத்து, 17,620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி, ஒரு கிலோ, 20 ரூபாய், கத்தரி, 36 ரூபாய், வெண்டை, 30 ரூபாய், புடலங்காய், 48 ரூபாய், அவரை, 60 ரூபாய், சின்ன வெங்காயம், 36 ரூபாய், பெரிய வெங்காயம், 30 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.