ADDED : ஜூன் 22, 2024 12:27 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், நேற்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
இதில், 41 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தனியார்துறை நிறுவனங்களும், -தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில், மாவட்ட வேலைவாய்பு அலுவலர் ஷீலா தலைமையில் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 24 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. பொது, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்பட, 114 பட்டதாரிகள் பங்கேற்றனர். அதில் 41 பேர் தேர்வாகி, பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.