Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/காளான் வளர்ப்பு குறித்து 25 நாள் பயிற்சி

காளான் வளர்ப்பு குறித்து 25 நாள் பயிற்சி

காளான் வளர்ப்பு குறித்து 25 நாள் பயிற்சி

காளான் வளர்ப்பு குறித்து 25 நாள் பயிற்சி

ADDED : ஜூன் 30, 2024 02:07 AM


Google News
நாமக்கல்,நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:

இந்திய தேசிய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன், வரும் ஜூலை, 16 முதல் ஆக., 21 வரை, 25 நாட்கள், முழுமையான, 'காளான் வளர்ப்பு மற்றும் காளான் விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில்' திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்' நடக்கிறது. இப்பயிற்சியில், லாபம் தரும் காளான் வளர்ப்பு முறைகள், விதை உற்பத்தி, காளானின் வகைகள், காளான் வளர்க்கப்படும் போது ஏற்படும் இடர்பாடுகளும், தீர்வுகளும், காளானில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறைகள் மற்றும் விற்பனை முறைகள் குறித்து விளக்கப்படுகிறது.

மேலும், காளான்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு நேரில் அழைத்து செல்லப்பட்டு தொழில் நுட்பங்கள் வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களும், கையேடும் வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பண்ணை மகளிர், விவசாய ஊரக இளைஞர்கள், படிப்பு முடித்து வேலையில்லாத மாணவ, மாணவியர், விவசாயம் சார்ந்த கள பணியாளர்கள், பண்ணையாளர்கள், தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் பயன்பெறலாம்.

முதலில் வரும், 25 பேருக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் நேரிலோ அல்லது 04286 266345, 266650, 99430 08802 என்ற தொலைபேசி மற்றும் மொபைல் எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us