ADDED : மார் 18, 2025 01:39 AM
ரூ.17 லட்சத்திற்குஆடுகள் விற்பனை
எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு எருமப்பட்டி, கஸ்துாரிப்பட்டி, முட்டாஞ்செட்டி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தற்போது, கடும் வெயிலால், தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று நடந்த ஆட்டுச்சந்தைக்கு, ஆடுகள் வரத்து அதிகரித்து, 17 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.