Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாட்டு சந்தையில் ரூ.1.50 கோடிக்கு வர்த்தகம்

மாட்டு சந்தையில் ரூ.1.50 கோடிக்கு வர்த்தகம்

மாட்டு சந்தையில் ரூ.1.50 கோடிக்கு வர்த்தகம்

மாட்டு சந்தையில் ரூ.1.50 கோடிக்கு வர்த்தகம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் ‍மாட்டுச்சந்தை நடக்கிறது.

இந்த சந்தைக்கு, நாமக்கல், சேந்தமங்கலம், வேலகவுண்டம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதேபோல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள், லாரிகளில் மாடுகளை மொத்தமாக வாங்கி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.இதேபோல், மாடுகளை வாங்க கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்த நிலையில், சில வாரங்களாக கர்நாடகா, கேரளாவில் நல்ல மழை பெய்து வருவதால், அங்கிருந்து வரும் வியாபாரிகள் வரத்து கடந்த, நான்கு வாரங்களாக குறைந்தது. இதனால், நேற்று நடந்த மாட்டு சந்தையில் விற்பனை குறைந்து, 1.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us