/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பட்டுக்கூடு 112 கிலோ ரூ.55,000க்கு விற்பனை பட்டுக்கூடு 112 கிலோ ரூ.55,000க்கு விற்பனை
பட்டுக்கூடு 112 கிலோ ரூ.55,000க்கு விற்பனை
பட்டுக்கூடு 112 கிலோ ரூ.55,000க்கு விற்பனை
பட்டுக்கூடு 112 கிலோ ரூ.55,000க்கு விற்பனை
ADDED : ஜூன் 29, 2025 12:54 AM
ராசிபுரம், ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 112 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில் அதிகபட்சம் கிலோ, 506 ரூபாய், குறைந்தபட்சம், 485 ரூபாய், சராசரி, 492.11 ரூபாய் என, 55,264 ரூபாய்க்கு விற்பனையானது.