Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் 9ல் சேந்தையில் மனுக்களை வழங்கலாம்

'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் 9ல் சேந்தையில் மனுக்களை வழங்கலாம்

'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் 9ல் சேந்தையில் மனுக்களை வழங்கலாம்

'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் 9ல் சேந்தையில் மனுக்களை வழங்கலாம்

ADDED : ஜூலை 06, 2024 08:14 AM


Google News
நாமக்கல்: 'சேந்தமங்கலம் தாலுகாவில், வரும், 19ல், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடக்கிறது. அதையொட்டி, வரும், 9ல் நடக்கும் நிகழ்ச்சியில், பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 'உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்' ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும், ஒரு நாள் தாலுகா அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய உள்ளது.

அதன்படி, சேந்தமங்கலம் தாலுகாவில், வரும், 19ல், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் நடக்கிறது. அதையொட்டி, வரும், 9ல் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகின்றன. சேந்தமங்கலம், ஆர்.ஐ., அலுவலகத்தில், மண்டல துணை தாசில்தார், மண்டல துணை பி.டி.ஓ.,; காளப்பநாயக்கன்பட்டி ஆர்.ஐ., அலுவலகத்தில், மண்டல துணை பி.டி.ஓ., ஆர்.ஐ.,; அலங்காநத்தம், ஆர்.ஐ., அலுவலகத்தில், மண்டல துணை பி.டி.ஓ., ஆர்.ஐ.,; எருமப்பட்டி ஆர்.ஐ., அலுவலகத்தில், மண்டல துணை பி.டி.ஓ., ஆர்.ஐ., ஆகியோர் மனுக்களை பெறுகின்றனர்.பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us